இரு சக்கர வாகனம்


சைக்கிளில் செல்வோர் கவனத்திற்கு :

நீங்கள் பொது சாலைகளில் சைக்கிளில் செல்ல கீழ்கண்ட தகுதிகள் தேவையானவை :

👉 10 மீட்டர் தூரத்திற்கு நேராக சைக்கிளில் ஓட்ட முடிய வேண்டும்.

👉 கீழே விழாமல் திடீரென சைக்கிளை நிறுத்த முடிய வேண்டும்.

👉 சைக்கிளில் செல்லும்போது ஒரு கையால் போக்குவரத்து வாகன சைகையை காட்ட இயல வேண்டும்.

👉 உங்கள் தோள்களை ஒட்டி தலையை திருப்பி பின்னால் வரும் வாகனத்தை கவனிக்கவும், வலதுபுறம் திரும்பவும் முடிய வேண்டும்.

நீங்கள் பொதுச்சாலைகளில் சைக்கிளில் செல்வதற்கு முன் சரிபார்க்க வேண்டியவை :

👉 சக்கரங்கள், பெடல் மற்றும் போக்கஸ் ஆகியவற்றில் பிரதிபலிப்பான்கள் பொருத்த வேண்டும்.

👉 இரு சக்கரங்களிலும் பிரேக் சரியாக பிடிக்கிறதா என சரிபார்த்தல் வேண்டும்.

👉 சைக்கிளில் பொருத்தப்பட்டுள்ள மணி ஒலிக்கின்றதா என சரிபார்க்க வேண்டும்.

👉 சைக்கிள் ஓட்டியின் இருக்கை, அவர் கால்கள் நிலத்தில் ஊன்றுமளவிற்கு பொருத்தப்பட வேண்டும்.

பொதுச்சாலையில் செல்லும் பொழுது :

👉 சைக்கிள் ஓட்டுபவர்கள் அணிய வேண்டிய தலைக்கவசம் அணிய வேண்டும்.

👉 சைக்கிள் செயினிலோ அல்லது சக்கரங்களிலோ மாட்டும் படியான ஆடைகள் அணியக்கூடாது.

👉 மங்கலான ஒளி அல்லது இரவு நேரத்தில் எளிதில் கண்டுபிடிக்கும் வகையில் மெல்லிய நிறங்களிலோ அல்லது பிரகாசமான நிறங்களிலோ உடைகள் அணிந்திருத்தல் வேண்டும்.

👉 ஒளியை பிரதிபலிக்கும் உடைகள், மணிக்கட்டு, பெல்ட் போன்றவற்றை அணியவேண்டும்.

நீங்கள் மேலும் கடைபிடிக்க வேண்டிய விதிகள் :

☞ போக்குவரத்து சைகைகள் காட்டும் நேரம் தவிர மற்ற நேரங்களில் ஒரு கையில் வாகனத்தை ஓட்டக்கூடாது.

☞ இரு கால்களையும் பெடல்களில் வைத்து சைக்கிளை செலுத்த வேண்டும்.

☞ இருவருக்கு மேலே சைக்கிளில் செல்லக்கூடாது.

☞ சைக்கிளுக்கென்று தனிவழி இருந்தால் அதில் மட்டுமே செல்ல வேண்டும்.

☞ போதிய பாதுகாப்பான இடைவெளி விட்டு வாகனத்தை தொடர்ந்து செல்ல வேண்டும்.

☞ சமநிலை கெடும் வகையில் சைக்கிளில் பாரம் ஏற்றி செல்லக்கூடாது.

☞ சைக்கிளில் மினுமினுக்கும் ரிப்லெக்டர் அல்லது ஸ்டிக்கர் பின்புறம் ஒட்டுவதால் இரவில் விபத்தைத் தவிர்க்கலாம்.

☞ இரவில் சைக்கிளில் லைட் இருப்பது அவசியம்.

☞ சைக்கிளில் செல்லும் போது ஒருவர் பின் ஒருவராகச் செல்லவும். இரண்டு, மூன்று சைக்கிள்கள் பக்கத்து பக்கத்தில் செல்வதால் மற்ற போக்குவரத்துக்கு இடைஞ்சல்கள் ஏற்படும்.

☞ நெரிசலான சாலையில் சைக்கிளில் குறுக்கே கடக்கும் போது சைக்கிளில் இருந்து கீழே இறங்கி சைக்கிளைத் தள்ளிச் சென்று கடக்கவும்.

☞ பெரிய, பரபரப்பான சாலைகளில் சைக்கிளில் செல்ல வேண்டாம்.

☞ பிற வாகனங்கள் போல சாலைகளில் இடது புறம் செல்ல வேண்டும்.

☞ கார் போன்ற வாகனங்கள் நிறுத்தியிருந்தால் நிதானித்து கடந்து செல்ல வேண்டும்.

☞ பிற வாகனங்கள் போல் போக்குவரத்து விதிகளை கடைபிடிக்க வேண்டும்.

☞ சாலைகளின் வலதுபுறத்தில் திரும்பும் பொழுது பின்னால் வரும் வாகனங்கள் கடந்த பிறகு திரும்பவும்.

☞ பாதசாரிகள் சாலைகளை கடக்கும் இடத்தில் சைக்கிளை நிறுத்தக் கூடாது.

☞ நடைபாதைகளில் சைக்கிள் ஓட்டக்கூடாது. பிற வாகனங்கள் திரும்பும் பொழுதும் அனுமதியின்றி முந்தி செல்லக்கூடாது.

☞ ஒருவழிப்பாதையில் செல்லக்கூடாது. சாலைகளில் செல்லும் பிற வாகன ஓட்டிகள் செய்யும் போக்குவரத்து சைகைகளை தெரிந்து கொள்ள வேண்டும்.

மோட்டார் சைக்கிளில் செல்பவர்கள் பின்பற்ற வேண்டியவை :

☞ கண்டிப்பாக தலைக்கவசம் அணிந்து வாகனம் ஓட்ட வேண்டும்.

☞ அலைபேசி பேசிக்கொண்டு வாகனம் ஓட்டுவதைத் தவிர்க்க வேண்டும்.

☞ வாகனம் ஓட்டும் போது பொறாமை இருக்கக் கூடாது.

☞ நடுரோட்டில் வாகனம் ஓட்டிச்செல்ல கூடாது.

☞ பிரேக் பிடித்தால் நிற்கும் தூரம் அறிந்து வாகனத்தை ஓட்ட வேண்டும்.

☞ பகலில் வாகன விளக்கை எரிய விடக்கூடாது.

☞ வாகனம் ஓட்டும் போது உங்களுக்கு முன்பு, பின்பு, வலது, இடது புறங்களில் வரும் வாகனத்தைக் கவனித்துக் கொண்டே வாகனத்தை ஓட்ட வேண்டும்.

☞ உங்களுக்கு முன்பு செல்லும் வாகனத்தை முந்த வேண்டும் என்றால் முதலில் வாகன ஒலி எழுப்பி விட்டு, பிறகு உங்களின் வாகன வேகத்தைக் கூட்டி வலது புறமாக முந்திச் செல்லுங்கள்.

☞ உங்களுக்குப் பின்னால் வருபவர்கள் ஒலி எழுப்பினால் அவர்களுக்கு வழிவிட வேண்டும்.

☞ சாலையில் செல்லும் போது சிக்னல் விழுந்தால் உடனடியாக வண்டியை நிறுத்தாதீர்கள். அவ்வாறு செய்தால் பின்னால் வரும் வாகனம் உங்கள் மீது இடித்து விட நேரிடும்.

☞ உங்கள் வாகனத்தில் இருக்கும் கண்ணாடியைப் பார்க்காமல் இடது புறமோ அல்லது வலதுபுறமோ திரும்ப கூடாது.

☞ சாலைச் சந்திப்பு, சாலையில் நடந்து செல்பவர்கள் கடந்து செல்லும் இடங்கள், பள்ளிக்கூடங்கள், போக்குவரத்து போன்ற நெருக்கடியான இடங்களில் இரு சக்கர வாகனத்தை குறைந்த வேகத்தில் ஒட்டிச் செல்ல வேண்டும்.

☞ சாலைக் குறுக்கீட்டையோ, சாலைச் சந்திப்பையோ, பயணிகள் கடக்கும் இடத்தையோ, திருப்பத்தையோ நெருங்கும்போது வாகனத்தின் வேகத்தைக் குறைக்க வேண்டும்.

☞ இரண்டு சக்கர வாகனத்தில் பின்புறம் உட்கார்ந்து வருபவரும் ஹெல்மெட் அணிவது பாதுகாப்பானது.

☞ இரண்டு சக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணியாவிடில் விபத்து ஏற்படும் போது தலையில் அடிபடும். தலையில் அடிபட்டால் உயிருக்கு அபாயம் நேரிட அதிக வாய்ப்புள்ளது.

☞ இரண்டு சக்கர வாகனத்தில் இருவருக்குமேல் செல்லக்கூடாது.

☞ அதிக பாரம் இருசக்கர வாகனத்தில் பாதுகாப்பற்ற முறையில் லோடு எடுத்துச் செல்வது உங்களுக்கு மட்டுமல்ல மற்றவர்களுக்கும் ஆபத்தை உண்டாக்கும்.

☞ வாகனம் ஓட்டும் போது திரும்பி பேசுதல், செல்போனில் பேசுதல் போன்ற கவன குறைவான செயல்களில் ஈடுபட வேண்டாம்.

☞ பச்சை விளக்கு சிக்னல் வந்த பிறகே வாகனத்தை நகர்த்த வேண்டும். மஞ்சள் விளக்கு சிக்னல் ஒளிர்ந்தால், சந்திப்பைக் கடக்க முயற்சி செய்யக் கூடாது.

☞ தீயணைப்பு வாகனம், அவசர ஊர்தி, மற்றும் நோயாளர் வண்டி போன்றவைகளுக்கு வாகன ஓட்டுநர்கள் தடையின்றி வழிவிடுதல் அவசியமாகும்.

☞ 50 வயதிற்கு மேற்பட்டவர்கள், அல்லது சர்க்கரை, ரத்த அழுத்தம் உள்ளவர்கள் வாகனம் ஓட்டுவதைத் தவிர்த்தல் நல்லது.

☞ வாகன ஓட்டுநர்கள் U திருப்பம் இல்லாத இடங்களில் தங்களது வாகனங்களை திருப்பக் கூடாது. அனுமதிக்கப்பட்ட இடங்களில்தான் வாகனங்களைத் திருப்ப வேண்டும்.

☞ மது அருந்தி விட்டு வாகனத்தை ஓட்டக் கூடாது.







logo